Saturday, April 20, 2024 1:38 pm

வெயில் காலத்தில் நாம் உண்ணும் தர்பூசணி பழத்தில் இவ்வளவு கெடுதல் உள்ளதா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மக்கள் அனைவருக்கும் கோடை காலம் வந்த உடனே மனதில் முதலில் வந்து நிற்பது தர்பூசணி பழம் தான்.கோடைகாலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பழங்ளில் ஒன்று தர்பூசணி. அதிகமாக தர்பூசணி பழத்தை தான் எடுத்துக் கொள்வோம்.

ஏனெனில் இதில் அதிக அளவு தண்ணீர் சத்து இருப்பதால் உடலை அதிக நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும். ஆனால் இதனை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது அஜீரணக் கோளாறு முதல் கல்லீரல் தொற்றுக்கள் வரை நிறைய உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று கூறுகின்றார்கள்.

​தர்பூசணியால் ஏற்படும் விளைவுகள்:அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று முன்னோர்கள் கூறுவார்கள். அது உடலுக்கு ஆரோக்கியம் தரும் தர்பூசணிக்கும் சேர்த்தே பொருந்தும்.

பழங்கள் உடலுக்கு ஆரோக்கியமானவை தான். ஆனால் பழங்களாக இருந்தாலும் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

​டயேரியா மற்றும் ஜீரணக்கோளாறுகள்:மிக அதிக அளவில் நீர்ச்சத்து கொண்ட பழங்களில் ஒன்றாக தர்பூசணி இருக்கிறது. அதேசமயம் இதில் டயட்டரி ஃபைபரும் அதிகமாக இருக்கிறது. அதனால் அதிகமாக தர்பூசணி பழத்தை எடுத்துக் கொள்ளும்போது, நிறைய ஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அஜீரணக் கோளாறு ஏற்படும்போது டயேரியா, வயிறு உப்பசம், மந்தம், குமட்டல், வாயுக்கோளாறுகள் ஆகியவை ஏற்படும்.அதிகரிக்கும் குளுக்கோஸ் அளவு:உங்களுக்கு நீரிழிவு பிரச்சினை இருந்தால் முதலில் நீங்கள் தவிர்க்க வேண்டியது பழங்களில் தர்பூசணி தான்.

தர்பூசணி ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். நீர்ச்சத்துக்களும் நார்ச்சத்தும் அதிகம் கொண்ட பழங்களில் ஒன்று தான் வாட்டர்மெலன் என்றாலும் அதில் அதிக கிளைசெமிக் குறியீடு இருப்பதால், இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.

​கல்லீரல் தொற்றுக்கள்:கல்லீரல் நம்முடைய உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். மிக அதிக அளவு தர்பூசணி எடுத்துக் கொண்டால் அது கல்லீரலில் பாதிப்பை ஏற்படும்.

அதிலும் குறிப்பாக, அதிகமாக ஆல்கஹால் எடுத்துக் கொள்பவர்கள் அதிக அளவில் தர்பூசணி பழங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

தர்பூசணியில் உள்ள அதிகப்படியான லைகோபின்களால் ஆல்கஹாலும் தர்பூசணியும் எதிரெதிர் விளைவுகளைக் கொண்டதாக இருக்கும். இது கல்லீரல் தொற்று போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

​அதிகப்படியான நீரேற்றம்:உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்வது மிக முக்கியம் தான். அதிலும் கோடை காலத்தில் இன்னும் அதிகமாக உடலுக்கு நீர்ச்சத்து தேவைப்படும். ஆகையால் நாம் நிறைய தர்ப்பூசணி எடுத்துக் கொள்வோம்.

ஆனால் தர்பூசணி நீரேற்றத்தை அதிக அளவு உண்டாக்கிவிடும். அதுவும் சில சமயங்களில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். இதனால் உடலின் சோடியம் அளவு அதிகரிக்கும். அப்படி அதிகப்படியான சோடியம் உடலில் உருவாகும்போது எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும்.

​இருதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் தர்பூசணி:தர்பூசணி பருவ கால பழங்களில் ஒன்று. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் பொட்டாசியமும் அதிக அளவில் நிறைந்திருக்கினறன. அதனால் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கிறது.

தர்பூசணி பழங்கள் அதிகமாக எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது தான். ஆனாலும் அதிலுள்ள அதிகப்படியான பொட்டாசியத்தால் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, கார்டியோ வாஸ்குலார் பிரச்சினைகள், மோசமான நாடித்துடிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்