மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு நிமிடம் 20 வினாடிகள் உள்ள இந்த டீசரில் பிரம்மாண்டமான காட்சிகளை பார்த்து கோலிவுட் திரையுலகத்தினர் மற்றும் அனைத்து ரசிகர்களும் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரமுக்கு குறைந்த அளவிலான சீன்கள் மட்டுமே இருப்பதாகவும், இதனால் டீசர் வெளியீட்டு விழாவில் சில காரணங்களால் கலந்து கொள்ளாமல் அவர் மணிரத்னம் மீது அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசரில் விக்ரமின் காட்சிகள் அதிகமாக இருப்பதுபோன்றுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், ‘இன்று மாலை 5 மணிக்கு, உங்களுக்காக ஸ்பெஷலாக எங்களிடம் இருக்கிறது’ என்று போஸ்டரை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் ‘எங்கள் சோழா ஒரு புலி’ என்று சோழ குல இளவரசனாக நடித்துள்ள விக்ரமின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.