தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் சீரியல் நடிகையாக புகழ் பெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி.
பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் அறிமுகமாகி சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பலரால் கண்டறியப்பட்டவராக திகழ்ந்த ரக்ஷிதா நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதன்பின் சில கருத்து வேறுபாடு காரணமாக சீரியலில் இருந்து விலகினார். பின் வேறொரு சேனலில் இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
தன் வாழ்க்கையை அப்படி காட்டி வருகிறது என்று கூறிய ரக்ஷிதா ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகர் தினேஷ் குமாரை விவாகரத்து செய்யாமல் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இருவரும் சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மனைவி ரக்ஷிதாவை போன்று தற்போது சீரியலில் முழு வீச்சில் நடிக்கவுள்ளாராம் நடிகர் தினேஷ். சன் தொலைக்காட்சி சேனல் சீரியல் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.