தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 16 வயதில் யாத்ராவும் 12 வயதில் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.
இப்படி சென்றிருக்கும் போது தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரியப்போவதாக கூறி அறிக்கையை வெளியிட்டனர். அதன் அடுத்த நாளில் இருந்தே இருவர் எப்படியாவது சேர்ந்துவிடுவார்கள் என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்.
அப்படி அவர்கள் பிரிவதாக கூறி 6 மாதங்களாகியும் பிரிவு குறித்து தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எதுவும் கூறாமல் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தனுஷும் – ஐஸ்வர்யாவும் ஒரு முடிவெடுத்து இணையவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஆரம்பத்தில் முரண்டு பிடித்த தனுஷ், தற்போது இறங்கி வந்து ஐஸ்வர்யாவை சந்திக்க முற்பட்டும் இருக்கிறார். ஆனால் ஐஸ்வர்யா அவரை சந்திக்க மறுத்து வந்த நிலையில் இருவரும் ஒரே விட்டில் இருப்பதாக செய்திகள் சமீபத்தில் வெளியானது. இதற்கு காரணம் அவர்களின் இரு மகன்களாக யாத்ரா, லிங்கா தானாம்.
இருவரும் ஒன்றாக எங்களுடன் இருக்க வேண்டும் என்று அப்பா, அம்மாவிடம் கூறியதால் தான் இந்த விசயம் நடபெற்றிருக்கிறதாம். அப்படி இவர்களின் திருமண நாளான நவம்பர் 18 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க போவதாகவும் குஊறப்படுகிறது. இதற்காக ரஜினி மற்றும் கஸ்தூரி ராஜா குடும்பத்தினர் காத்து வருகிறார்களாம்.