‘பொன்னியின் செல்வன்’ கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய அதே தலைப்பில் நாவலை அடிப்படையாகக் கொண்டது, மேலும் மணிரத்னம் ஐந்து தொகுதி புத்தகங்களை படத்தின் இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா மற்றும் விக்ரம் பிரபு ஆகியோர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
தமிழ் சினிமாவில் சியான் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுவர் நடிகர் விக்ரம். 56 வயதான இவர் இன்னும் கெத்தாக அப்படியேதான் இருக்கிறார். எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும், தனது அசுரர் நடிப்பால் அனைவரையும் பிரமிக்க வைத்து விடுவார்.
இவர் தற்போது மணி ரத்தினம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த நிலையில் நன்றாக இருந்த விக்ரம் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
#BREAKING | திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் விக்ரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி!
— Sun News (@sunnewstamil) July 8, 2022