அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்த சிவரஞ்சனா தனது மாமனார் மீது பாலியல் புகார் கொடுத்திருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.
சென்னை கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் துணை நடிகை ரஞ்சனா நாச்சியார் ( வயது 38).
நடிகை ரஞ்சனா நாச்சியார் தன் மாமனார் சரவண வேல் (வயது 73) மற்றும் அவரது மனைவி ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்துவதாக, மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்த சம்பவம் குறித்து ரஞ்சனா கூறுகையில், “என் கணவருக்கு மனநலம் சரி இல்லை.அவரை எனக்கு திருமணம் செய்து வைத்து என்னை ஏமாற்றிவிட்டனர்.
என் கணவர் தற்போது, மனநல சிகிச்சை பெற்று வருகிறார். என் மாமனார் சரவணவேல் தன் மனைவியுடன் சேர்ந்து என்னை கொடுமைப்படுத்தி வருகிறார். ஆடையை கிழித்து என்னை தாக்கி விட்டார்கள்.
இது குறித்து இதற்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். என் புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.