Thursday, April 25, 2024 10:26 pm

மனைவிக்கு சமாதான தூது விட்ட தனுஷ்..! ஐஸ்வர்யா போட்ட கண்டிஷன்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி 17ம் தேதி நள்ளிரவில் அதிரடியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.இருவருக்கு கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் ஆந்திராவில் உள்ள ஒரே ஓட்டலில் இருந்து கொண்டு இருவரும் தனி தனியாக அறிக்கை ஒன்றை ஒரே நேரத்தில் வெளியிட்டு இருவரும் பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு இரண்டு குடும்பத்தினரும் மீண்டும் இவர்களை இணைந்து வைக்கும் முயற்சியில் இறங்கியவர்கள், தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ஆந்திராவில் இருந்து சென்னை திரும்பி வரும் பொழுது மீண்டும் இணைந்து ஜோடியாக தான் திரும்பி வர வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர், இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய வந்தனர் இரண்டு குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள், ஆனால் அவர்கள் முயற்சி தோல்வியை தழுவியது.

இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில், ஐஸ்வர்யா இயக்குனர் அவதாரம் எடுத்து சினிமாவில் பிசியானார், மனைவியை விட்டு பிரிந்த பின்பு தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படம் படுதோல்வி அடைந்தது, மேலும் சினிமாவில் மிக பெரிய சரிவை சந்தித்தார். இதன் பின்பு மீண்டும் மனைவி ஐஸ்வர்யா மற்றும் மாமனார் ரஜினிகாந்த் ஆகியோரை சந்திக்க முயற்சி செய்து வந்துள்ளார் தனுஷ்.

ஆனால் அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை, தன்னுடைய பெயருக்கு பின்னால் இருந்த கணவர் தனுஷ் பெயரை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கினார் ஐஸ்வர்யா, இந்த சம்பவத்துக்கு பின்பு இருவரும் இணைவதர்க்கு வாய்ப்பில்லை என தகவல் வெளியான நிலையில், திருசிற்றம்பலம் படத்தில் பல வருடங்களுக்கு பின் மீண்டும் தனுஷ் உடன் இணைத்துள்ளார் அனிரூத். இதனை தொடர்ந்து அனிரூத் உதவியுடன் ஐஸ்வர்யாவை சந்தித்துள்ளார் தனுஷ்.

இதனை தொடர்ந்து தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் சமரசம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி அவர்கள் இருவரும் பிரிவதற்கு முன்பு சென்னை அரியபுரத்தில் வசித்து வந்த வீட்டில் தற்பொழுது இருவரும் ரகசியமாக சந்தித்து அங்கே மகிழ்ச்சியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ஒருவொருக்கொருவர் சமாதனம் செய்து மீண்டும் ரகசியமாக இணைந்துள்ளது குறித்து இருவரும் அவரவர் குடும்பத்திடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

aishwariya dhanush

மேலும் வரும் ஜூலை 28ம் தேதி தனுஷ் பிறந்தநாள் அன்று மீண்டும் இருவரும் இணைந்து விட்ட தகவலை, தனுஷ் பிறந்த தினத்தன்று இருவரும் ஒன்றாக கொண்டாடி அதை வெளி உலகத்துக்கு தெரிய படுத்த இருப்பதாக குடும்பத்தினரிடம் இருவரும் தெரிவித்துள்ளனர், இதற்கு குடும்பத்தினர் ஜூலை 28ம் தேதி தனுஷ் பிறந்தநாள் அன்று திருப்பதி சென்று அங்கே குடும்பத்துடன் சுவாமி வழிபாடு நடத்தி, நீங்கள் மீண்டும் இணைந்துவிட்டோம் என்பதை வெளிப்படுத்துங்கள் என குடும்பத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தற்பொழுது மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வர இருப்பதால் திருப்பதி செல்வதில் சிக்கல் ஏற்பட்டால் தனுஷ் பிறந்த நாள் அன்று போயஸ் கார்டன் ரஜினிகாந்த் இல்லத்தில் மீண்டும் தனுஷ் – ஐஸ்வர்யா இணையும் நிகழ்வு நடைபெறலாம் என கூறப்படுவது குறிப்பிடதக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்