நடிகர் அஜித்குமார் சினிமாவில் அறிமுகமானபோது, ஆரம்பம் முதலாக காதல் மன்னனாக தான் வலம் வந்தார். அதன் பிறகு தான், ஆக்சன் ஹீரோவாக வலம் வர தொடங்கினாராம்.
அஜித்தை காதல் மன்னனாக வலம் வரவைத்த இயக்குனர் சரண், அதற்கு பிறகு முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக வலம் வர வைத்தது அமர்க்களம் திரைப்படம் தான். அந்த திரைப்படம் அஜித்திற்கு மிக பெரிய வெற்றி திரைப்படமான அமைந்தது.
அஜித்தை காதல் மன்னனாக வலம் வரவைத்த இயக்குனர் சரண், அதற்கு பிறகு முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக வலம் வர வைத்தது அமர்க்களம் திரைப்படம் தான். அந்த திரைப்படம் அஜித்திற்கு மிக பெரிய வெற்றி திரைப்படமான அமைந்தது.
இந்த இரு வெற்றிகளை தொடர்ந்து அஜித் – இயக்குனர் சரண் கூட்டணி மூன்றாவது முறையாக அட்டகாசம் படத்திற்காக இணைந்தது. ஆனால் அதே சமயம் இயக்குனர் சரணுக்கு மிக பெரிய வாய்ப்பு வந்தது.
அது கமல்ஹாசனின் வசூல்ராஜா MBBS படத்தை இயக்கும் வாய்ப்பு. ஆனால், அஜித் படத்தை ஒப்புக்கொண்டு தொடங்கிவிட்டோமே என தயங்கி நின்றுள்ளார் சரண். இதனை அறிந்து கொண்ட அஜித், பெருந்தன்மையுடன் முதலில் கமல் சார் படத்தை இயக்கிவிடுங்கள் பிறகு நம்ம படத்தை பார்த்துக்கொள்ளலாம். என கூறிவிட்டாராம்
அப்படி, அன்று அஜித் விட்டுக்கொடுத்தாதான் காரணமாக தான் கமல்ஹாசனுக்கு வசூல்ராஜா எனும் மெகா ஹிட் திரைப்படம் கிடைத்தது. வேறு இயக்குனர் இயக்கி இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்து பார்க்காதபடி சிறப்பாக வசூல்ராஜாவை இயக்கி இருந்தார் சரண்.
அதற்கு பிறகு தான் அட்டகாசம் திரைப்படத்தை ஆரம்பித்து, அந்தப்படத்தையும் வெற்றி படமாக மாற்றினார் இயக்குனர் சரண். அந்த படத்தில் தான் தல போல வருமா என பாடலும், அஜித்தின் வெள்ளை வேட்டி சட்டை லுக்கும் தற்போதும் ரசிகர்களின் பேவரைட்.