தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது வினோத் இயக்கத்தில் அவரது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ஹைதிராபாத்தில் நடந்து வந்தது. ஒரு பிரமாண்ட பேங்க் செட்டப் வைத்து படமாக்கப்பட்டது.
விடுமுறைகாக லண்டன் மேற்கொண்டுள்ளார் அஜித். இந்த நிலையில் ஒரு பழைய வீடியோ ஒன்று இணையத்தில்
வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு விருது வழங்கும் விழாவில் நடிகர் அஜித் பங்கேற்று உள்ளார். அப்போது அந்த விழாவை தொகுத்து வழங்கியது இப்போது சூப்பர் ஹீரோவாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தான்.
அந்த சமயம் அஜித்தின் நடிப்பில் மங்காத்தா படம் வெளியானது. அந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் இயக்குனர் வெங்கட் பிரபுவை மேடையில் வரவழைக்க நல்ல ஒரு தொடக்கத்தை கூறினார்.
அதாவது இவர் கதையில்லாமல் கூட படமெடுப்பார். ஆனால் இவர் தம்பி இல்லாமல் படமே எடுக்கமாட்டார் என கூறி வெங்கட்பிரபுவை மேடையில் அழைக்க அதை கேட்டு அஜித் வயிறு குலுங்க சிரித்து விட்டார். இந்த வீடியோதான் இப்போது டிரெண்டாகி வருகிறது.