பிரபல அதிரடி இயக்குனர் ஹரி இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் நேற்று வெளியான ‘யானை’ திரைப்படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் ஊடகங்களில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கலளே குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் வசூல் சாதனை செய்யும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘அருவா’ என்ற திரைப்படம் உருவாக இருந்த நிலையில் திடீரென அந்த படம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. அந்த படத்தின் கதைதான் ‘யானை’ படத்தின் கதை என்று கூறப்பட்ட நிலையில் அதனை மறுத்த இயக்குனர் ஹரி, ‘அருவா’ அங்கேயே தான் இருக்கு எப்ப வேணுமெண்டாலும் எடுத்துக்கலாம் என்றும் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் சூர்யா தற்போது பான் இந்தியா நடிகராக மாறியுள்ள நிலையில் ‘அருவா’ படமும் பான் இந்தியா திரைப்படமாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. மேலும் இப்படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹரி ‘அருவா’ படத்தில் உள்ள கேரக்டர்களில் யார் யார் பொருத்தமாக இருப்பார்களோ அவர்களை கண்டிப்பாக பயன்படுத்துவோம் என்றும் அது பிற மாநில கலைஞர்களாக இருந்தாலும் சரி என்றும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து ‘அருவா’ திரைப்படம் மீண்டும் புத்துயிர் பெறும் என்றும், பான் இந்தியா திரைப்படமாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.