Friday, March 29, 2024 2:32 am

மறைந்த மீனாவின் கணவர் மரணத்தில் சந்தேகம்! மீனா ஏன் முயற்சிக்கவில்லை? சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மீனாவின் கணவர் மரணத்தில் சந்தேகமுள்ளதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த மீனா, தொழிலதிபர் வித்யாசாகரை 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியின் மகள் நைனிகா தெறி எனும் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்த நிலையில் நுரையீரல் தொடர்பான பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதனைத் தொடர்ந்து, மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டு, இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது. முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பலரும் வித்யாசாகர் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், யூடியூபில் சினிமா குறித்த செய்திகளை கூறி கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் தற்போது மீனாவின் கணவர் குறித்து பேசியுள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யூடியூப் வீடியோ ஒன்றில் அவர் பேசுகையில், மீனா திடீரென குடும்பத்துடன் சென்னைக்கு வர காரணம் என்ன? அவரது கணவர் மரணம் அடைந்து வெகுநேரமாகியும், மருத்துவமனை சார்பில் அறிக்கை எதுவும் வெளியாகாதது ஏன்? எனவும், அறிக்கை வெளியானால் தான் வித்யாசாகர் மரணத்தில் மர்மம் இருக்கிறதா இல்லையா என தெரிய வரும் என கூறியுள்ளார்.

அதேபோல் வித்யாசாகருக்கு தன் மனைவி, மகள் நடிப்பது பிடிக்கவில்லை என்றும், அதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம் என்றும் பேசியுள்ளார். மேலும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு மீனா ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சொத்துக்கள் இருக்கும்போது ஏன் மீனா மீண்டும் நடிக்க வந்தார்? என்றும் அவர் கேட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் பயில்வான் ரங்கநாதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேபோல் திரையுலகினரை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக கூறி பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்