Friday, April 19, 2024 1:50 pm

தெரு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயர சம்பவம் – சோகத்தில் மூழ்கிய ஊர் மக்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பக்கத்துவீட்டு நாய் கடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த மாங்கர என்ற பகுதியில் வசிப்பவர் ஸ்ரீலட்சுமி(19). இவர் கோயம்புத்தூர் உள்ள தனியார் கல்லூரியில் BCA முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இதனிடையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கல்லூரிக்கு செல்லுகையில், பக்கத்துவீட்டு நாய் ஒன்று லட்சுமியை கடித்துள்ளது.பின்னர், அவரது பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவருக்கு நாய் கடித்தற்கான தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் அவருக்கு எந்த விதமான நோய் தொற்று அறிகுறிகளும் தென்படவில்லை. ஆனால் சில தினங்களுக்கு பிறகு Rabies நோய் தொற்றுக்கான அறிகுறிகள், ஸ்ரீலட்சுமிக்கு தோன்றியதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து மீண்டும் அந்த இளம்பெண்ணை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்த நிலையில், வருக்கு அதிக காய்ச்சல் இருந்துள்ளது.

மேலும், Rabies நோய்க்கான சிகிச்சையும் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், நாய் கடிக்கப்பட்டு சுமார் ஒரு மாதங்கள் ஆன நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி ஸ்ரீலட்சுமி தற்போது உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்கள் அனைவரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதற்கு முன்னதாக அந்த மாணவியை கடிப்பதற்கு முன் அந்த நாயின் வீட்டு உரிமையாளரையும் கடித்துள்ளது. ஆனால் அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்