Saturday, April 20, 2024 8:51 am

இறுதிச்சடங்கில் மகன் இல்லாத குறையை தீர்க்க மீனா செய்த செயல் !! நீங்களே பாருங்க !!கண்ணீர் விடும் ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகை மீனாவின் கணவர் வித்தியாசகர், நேற்று முன்தினம் இரவு காலமான நிலையில், நேற்று இறுதிச்சடங்கில் கணவரின் உடலுக்கு மீனா கடைசியாக கண்ணீர் மல்க முத்தம் கொடுத்தது, அங்கிருந்த பலரையும் கண் கலங்க வைத்தது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை மீனா. இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார். நைனிகா தெறி, பாஸ்கர் ஒரு ராஸ்கள் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இதனிடையே 48 வயதே ஆன வித்யாசாகர், நுரையீரல் தொற்றால் கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

பின்னர் நேற்று பிற்பகல் வீட்டில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு வித்யாசாகரின் உடல் அமரர் ஊதியில் ஊர்வலமாக சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, அங்கு மீனாவும், அவரது மகளும் வித்யாசாகரின் உடலுக்கு இறுதி சடங்கு செலுத்தினர். தனது, கணவரின் முகத்தை கடைசியாக பார்த்த மீனா, கண்ணீருடன் கையெடுத்து கும்பிட்டு விடை கொடுத்து அனுப்பிவைத்தார்.

மேலும், தங்களுக்கு ஆண் வாரிசு இல்லாததால் நடிகை மீனாவே தனது கணவருக்கு இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டும் தோளில் துண்டால் போர்த்திக் கொண்டும் இறுதிச்சடங்குகளை செய்து முடித்தார். இது பார்ப்பவர் நெஞ்சை உருக வைத்தது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்