இயக்குனர் நெல்சன் அவர்கள் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை கொடுத்துள்ளார் அதன் பிறகு விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வந்த நிலையில் நெல்சன் அவர்களை பலரும் திட்டி தீர்த்தனர்.
அதனைத் தொடர்ந்து ரஜினியை வைத்து தலைவர் 169 படத்தை இயக்க உள்ளார் இந்த திரைப்படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வந்துள்ளது. ஆனால் திடீரென தற்போது இந்த படத்தின் டைட்டில் ஏதோ ஒரு மிகப்பெரிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
அது என்னவென்றால் ஜெய்லர் என்ற டைட்டிலை மலையாளத் திரைப்படத்தில் வைத்துள்ளதாகவும் அந்த படத்தின் பாதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழில் ஜெயிலர் என்ற படம் வெளியானால் மலையாளத்தில் ஜெயிலர் என்று ஒரே டைட்டிலை வைக்க முடியாது என்று ஒரு சிக்கல் உருவாகியுள்ளது.
அதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறுகிறார் ரஜினி. இதற்கு வேற டைட்டில் வைப்பார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்