மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவர் பிரித்விராஜ் என்பதும் இவர் மோகன்லால் நடித்த ‘லூசிபர்’ உட்பட ஒரு சில படங்களை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் விரைவில் இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ‘லூசிபர்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில், ரஜினிகாந்த் தனக்கு ஓர் படத்தை இயக்க பிரிதிவிராஜூக்கு வாய்ப்பு கொடுத்ததாகவும் ஆனால் ரஜினிகாந்த் அவர்களுக்கு பொருத்தமான கதை தன்னிடம் இல்லை என்பதால் அந்த வாய்ப்பை அவர் மறுத்ததாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு பொருத்தமான கதை தோன்றினால் கண்டிப்பாக அவரை வைத்து படம் இயக்குவேன் என்றும் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.
பிரித்விராஜ், விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன், நடித்த ‘கடுவா’ என்ற திரைப்படம் ஜூலை 7 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.