Friday, April 26, 2024 12:48 am

உண்மையிலேயே மீனாவின் கணவர் உயிரிழப்புக்கு முக்கிய காரணமே இதுவா ? உறவினர்கள் கொடுத்த அதிர்ச்சி தகவல் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாகவும் அவருக்கு ஜோடியாகவும் பல படங்களில் நடித்துள்ளார். இதேபோல் கமல்ஹாசன், அஜித், விஜய், சத்யாராஜ், சரத்குமார், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்து அசத்தி இருந்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்துள்ளார் மீனா. இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மீனா பெங்களூருவை சேர்ந்த மென் பொறியாளர் வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுக்குறித்து அவரது உறவினர்கள் வட்டாரத்தில் கேட்டபோது, வித்யாசாகருக்கு ஏற்கெனவே நுரையீரல் பாதிப்பு அவருக்கு இருந்தது. அது இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்குப் பாதிப்பை உண்டாக்கக் கூடிய பிரச்னை. அதாவது புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிற போது உண்டாகக் கூடிய நோய். பெங்களூருவில் அவருடைய வீட்டுக்கு அருகே நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.

அதனால் அலர்ஜி ஏற்பட்டு அவருக்கு சுவாசப் பிரச்னை ஏற்பட்டது. ஏற்கெனவே இந்தப் பாதிப்பு இருந்த நிலையில் கொரோனா வைரஸாலும் அவர் பாதிக்கப்பட்டார்.

இதனால் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமடைந்து நேற்று இறந்துட்டார் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா தொற்று, நுரையீரல் பிரச்சனை என பல்வேறு காரணங்களே இவரின் இறப்பிற்கு காரணம் என கூறப்படுகின்றது.

மேலும் இவருக்கு கொரோன வைரஸ் தொற்று இருப்பதால் இவருக்கு இறப்பு சடங்குகள் செய்ய முடியாது இவரது உடலும் உறவினர்கள் பார்ப்பதற்கு அனுமதி கிடையாது கொரோன பாதுகாப்பு கவசங்களுடன் இவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்பதால் தந்தையின் முகத்தை பார்க்கமுடியாமல் கதறிய மகள்

- Advertisement -

சமீபத்திய கதைகள்