தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தனது 61 வது படத்தின் முதலாம் கட்டப் படப்பிடிப்பை தற்பொழுது நிறைவு செய்து விட்டு ஐரோப்பா முழுவதும் விசிட் அடிக்க டூர் சென்று விட்டார். ஐரோப்பில் இவர் எடுத்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மேலும் இவர் தனது 61வது படத்தில் நெக்கட்டிவ் ரோலில் நடிப்பதாகவும் இப்படத்தில் இவருடன் இளம்நடிகர் வீரா, சமுத்திரக்கனி மலையாள நடிகை மஞ்சுவாரியர் என மிகப்பெரிய நட்சத் திரங்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்கி வருகின்றார்.
அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் அம்மா, சித்தி மற்றும் இன்னும் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தும் நடிகை தான் சரண்யா பொன்வண்ணன். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டுள்ளார். அந்த பேட்டியில் நடிகர் அஜித்தை பற்றி பல சுவாரஸியமான தகவல்களை கூறியுள்ளா ர்.
மேலும், அஜித்தை பார்த்து தங்கத்திலும் தங்கம் குழந்தைக்கு குழந்தை மாதிரி சமையலில் வில்லாதி வில்லன் மொத்தத்தில் அவர் ஒரு கடவுள் என அஜித்தை புகழ்ந்து பேசி உள்ளார். சினிமாவில் இப்படி ஒரு அற்புதமான மனிதராக அவர் இருப்பதாகவும் இன்னும் சில பல சுவாரசியமான தகவல்களை அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.