மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அம்பிகா ராவ். கும்பளங்கி நைட்ஸ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் மலையாள ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றார். அதன்பின்பு மீசை மாதவன், தமாஷா, சால்ட் அண்ட் பெப்பர், ராஜமாணிக்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார்.
அத்தோடு பல படங்களின் டைரக்டராகவும் பணிபுரிந்தார் கொச்சியை சேர்ந்த அம்பிகா கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்சினை அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதே நிலையில், நேற்று இரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த மலையாளத் திரையுலகினர் இவருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.