நடிகை கௌதமி 1988 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் ஜோடியாக ‘குரு சிஷ்யன்’ திரைப்படத்தில் தமிழில் அறிமுகமாகி உடனடி நட்சத்திரத்தை வென்றார். அடுத்த ஆண்டு, அவர் முதல் முறையாக கமல்ஹாசனுடன் ‘அபூர்வ சகோர்கள்’ படத்தில் ஜோடியாக நடித்தார் மற்றும் கார்த்திக், பிரபு, விஜயகாந்த் மற்றும் சத்யராஜ் உட்பட அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்தார்.
நடிகர் கமல் ஹாசன் ஒரு காதல் மன்னன் என்பதை திரையுலகம் அறியும். ஆம், கடந்த 1978ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவர் கமல் ஹாசன் திருமணம் செய்துகொண்டார். 10 ஆண்டுகள் தொடர்ந்த இந்த திருமணம் பந்தம் விவாகரத்தில் முடிந்தது.
வாணி கணபதியை விவாகரத்து செய்த அதே ஆண்டில், சரிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். கமல் ஹாசனுக்கும், சரிகாவிற்கும் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர். இருவருமே தற்போது நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 2004ஆம் ஆண்டு தனது இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் கமல் ஹாசன்.
அதே ஆண்டில் நடிகை கௌதமியுடன் திருமணம் செய்துகொள்ளாமல் லிவிங் டு கெதர் முறையில் வாழ துவங்கினார் கமல். கமல் ஹாசனுடன் வாழ துவங்கவதற்கு முன் நடிகை கௌதமி தனது கணவரை விவாகரத்து செய்தார்.
ஆம், நடிகை 1998ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவர் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தார். ஆனால், இருவரும் 1999ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். இந்நிலையில், திருமணம் செய்துகொள்ளாமல் கமல் ஹாசனுடன் வாழ்ந்தார்.
பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த நடிகை கௌதமி மகளின் எதிர்காலத்தை நினைத்து கமல் ஹாசனிடம் இருந்து பிரிந்து தனியாக சென்று விட்டார். அதன்பின் அரசியல் படங்கள் என்று பிஸியாக இருந்து வருகிறார் கெளதமி. தற்போது கெளதமியின் முன்னாள் கணவரின் புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்.
சுப்பலட்சுமி தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார் என்று கடந்த சில வருடங்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இப்போது சமீபத்திய புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அவரது திரையில் பார்க்க காத்திருக்க முடியாது.