தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது காதல் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார். விவாகரத்துக்கு பின் இருவரும் அவரவர் பாதையில் தனித்தனியாக பயணிக்கப்போவதாகவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இருவரையும் மீண்டும் ஒன்றாக சேர்த்துவைக்க அவரவரின் குடும்பத்தினர்கள் பல முயற்சிகளை செய்து வந்தார்கள். ஆனால், எதுவும் கைகொடுக்கவில்லை. விவாகரத்து ஆன பின், இருவரும் ஒரே முறை சந்தித்துக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால், விவாகரத்துக்கு முன் இருவரும் வாழ்ந்து வந்த வீட்டிற்கு இருவரும் தற்போது சென்று வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதற்க்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிய பல காரணங்கள் கூறப்படுகிறது. அதில் ஒன்று தனுஷ் சில பெண்களுடன் தொடர்பில் இருந்தது என்று தகவல் உள்ளது.
அதில் ஒருவர் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி என்றும் கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக இருக்கும் பொழுது, ஐஸ்வர்யா பார்த்துள்ளார் என்றும் சில கிசுகிசுவுள்ளது. இதனால் தான் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்தார்கள் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.