பிரபல வெற்றி பட இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம் நடிப்பில் உருவாகும் திரைப்படம் குறித்த தகவல் ஏற்கனவே பார்த்தது. இந்நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகயிருக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தரப்பில் தகவல் கசிந்துள்ள நிலையில், இந்த படத்தை 3D டெக்னாலஜியில் உருவாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும், இந்த படத்தின் கதை உண்மைச்சம்பவத்தை மையப்படுத்தி உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ‘கேஜிஎப்’ திரைப்படம் போல இப் படமும் தங்கச்சுரங்கம் பற்றிய கதையம்சம் கொண்டது என்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பை கேஜிஎப் லோகேஷனில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெருவிக்கின்றன.
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் தமிழ் சினிமாவில் உருவாகும் வித்தியாசமான, புதுமையான மற்றும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் ஒன்று என்றும் கூறப்படுகிறது.