Thursday, April 18, 2024 7:47 pm

உண்மையிலேயே வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் விஜய் சேர்ந்து படம் பண்ணப்போறாங்களா ? கசிந்த உண்மை இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது மாநாடு எனும் பிளக் பஸ்டர் திரைப்படத்தையும், மன்மத லீலை எனும் எதிர்பாரா சூப்பர் ஹிட் படத்தையம் கொடுத்து புது தெம்புடன் அக்கட தேசத்தில் தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்க தயாராகிவிட்டார்.

அந்த திரைப்படத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்க உள்ளார். விரைவில் அதற்கான ஷூட்டிங் ஆரம்பிக்க உள்ளது. அந்த படத்தை அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார் என கூறப்படுகிறது.

இப்படி போய்க்கொண்டிருக்கும் போது, அண்மையில் வெங்கட் பிரபுவின் அப்பா இசையமைப்பாளர் கங்கை அமரன், ‘வெங்கட் பிரபுவிடம் விஜயையும், அஜித்தையும் வைத்து சேர்த்து படம் இயக்க கதை தயாராக இருக்கிறது ‘ என்பது போல் பேட்டியளித்துவிட்டார்.

அது நேற்று முழுக்க இணையத்தில் தலைப்பு செய்தியாக மாறிவிட்டது. பலரும் அடுத்த பான் இந்தியா திரைப்படம் ரெடி என்றவாறு ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். இதனை கவனித்த வெங்கட் பிரபு நேற்று சாயங்காலம் தனது டிவிட்டரில் ஒரு மனிதன் அதிர்ச்சியில் பார்ப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

இந்த டிவீட்டை பார்த்த ரசிகர்கள், அதற்கு கிழே, தகப்பா என்ன இதெல்லாம் என்பது போல இருக்கிறது. அப்பாவின் பேட்டிக்கும், நெட்டில் உலாவிய வதந்திகளுக்கும் தான் இது முற்றுப்புள்ளி என கூறி வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்