தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமாரின் வாரிசானை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை வரலட்சுமி. இப்படத்திற்கு பிறகு முன்னணி நடிகர்களுடன் நடித்தும் வில்லி கதாபாத்திரங்களிலும் நடித்தும் வருகிறார்.
சமீபத்தில் நடிகை வரலட்சுமி அளித்த பேட்டியொன்றில் ராதிகாவை ஏன் ஆண்ட்டி என்று கூறுகிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர், ராதிகா என்னுடைய அப்பாவின் இரண்டாம் மனைவி. மக்கள் பல கருத்துக்களை சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள்.
தாய் என்றால் அது ஒருவர் மட்டும் தான். அனைவருக்குமே ஒரே ஒரு தாய் மட்டும் தான். அதனால் ராதிகா அவர்கள் என்னுடைய அம்மா கிடையாது. அவர் எனக்கு ஆண்டி தான். அவர்களுக்கு என்னுடைய தந்தை சரத்குமார் அவர்களுக்கு இணையாக மரியாதை கொடுத்து வருகிறேன்.
ஒரு அப்பாவாக சரத்குமார் அவர்களும் தன்னுடைய கடமையை செய்து உள்ளார். ஒரு சில பேருக்கு வேலை வெட்டியே இல்ல. அவங்க வேலையே இந்த மாதிரி பேசுறது தான். வேலை இருந்தால் ஏன் இப்படி பேசப்போகிறார்கள் என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சரத்குமார் 1985ல் சயா என்பவரை திருமணம் செய்து வரலட்சுமியை பெற்றார். அதன்பின் சர்த்குமாரும் சயாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். பின் சரத்குமார் நடிகை ராதிகாவை காதலித்து 2001ல் திருமணம் செய்து கொண்டார்.
ராதிகா ஏற்கனவே ராதிகா இரு திருமணம் செய்து விவாகரத்தானவர். ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்த இரு ஆண்டுகள் ரயான் ஹார்டி என்ற மகனை பெற்று விவாகரத்து பெற்றார். அதன்பின் 10 வருடங்களுக்கு பிறகு சரத்குமாரை திருமணம் செய்தார் ராதிகா.
#Radhika Is Not My Mother #Varalakshmisarathkumar Bold Answer pic.twitter.com/4179D5iflK
— chettyrajubhai (@chettyrajubhai) June 17, 2022