பிரபல வானொலியில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி பிரபலமானவர் மாகாபா ஆனந்த். இதன்பின் பிரபல தொலைக்காட்சியில் அதுஇதுஎது என்ற நிகழ்ச்சியை சிவகார்த்திகேயனுக்கு அடுத்த அந்த இடத்தினை பிடித்தார்.
இந்நிகழ்ச்சி மூலம் தன் திறமையை நிரூபித்து அடுத்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல பெண் தொகுப்பாளினிகளுடன் பணியாற்றிய மாகாபா தற்போது விஜே பிரியங்காவுடன் தொகுத்து வழங்கி வருகிறார். இருவரும் சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சிக்கென்றே ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை தாண்டி பலர் முன்னேற ஒரு தூணாக இருந்து வருகிறார் மாகாபா. ஒரு நிகழ்ச்சியின் ஒரு எபிசோட்டிற்கு மட்டும் ரூ. 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார் மாகாபா.
தற்போது நிகழ்ச்சி மட்டுமில்லாது விளம்பரங்களிலும் நடித்து வரும் மாகாபா இன்ஸ்டாகிராமில் சில பிராடெக்களை விளம்பரப்படுத்தி காசு சம்பாதித்து வருகிறார். சமீபத்தில் கூட தாய்லாந்து டூர் சென்று குறிப்பிட்ட அந்த நிறுவனத்தினை விளம்பரம் செய்து சில லட்சத்தினை பெற்றுக்கொண்டார்.
இதுவரை அவரது மொத்த சொத்து மதிப்பு 4 முதல் 5 மில்லியன் USD என கூறப்படுகிறது. அவரது ஆடம்பர வீட்டினை சில வருடங்களுக்கு முன் தான் கட்டியமைத்தார் மாகாபா.