ரஜினிகாந்த் தனது அடுத்த படத்திற்காக நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்துள்ளார், மேலும் படம் சில மாதங்களுக்கு முன்பு டீசருடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இப்போது தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ புதுப்பிப்பு, நெல்சனுடன் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. ‘தலைவர் 169’ படத்தின் தயாரிப்பாளர்கள் நேற்று இரவு ரஜினிகாந்தின் படம் குறித்த அறிவிப்புடன் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படத்திற்கு பிறகு யார் இயக்குனர் என்ற கேள்வி எழுந்து வந்த சூழலில் பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சனை கமிட் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர் சன் பிக்சர்ஸ்.
நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் படுமோசமான விமர்சனத்தையும் கேலிகிண்டலை சந்தித்தது. இதனால் நெல்சன் மீது இருந்த நம்பிக்கை சற்று ரஜினிகாந்த் ரசிகர்க்ளிடம் சந்தேகத்தை எழுப்பியது.
ஆனால் ரஜினி நம்பிக்கையோடு நெல்சன் தான் என்னுடைய 169வது படத்தினை இயக்க வேண்டும் என்று கூறி இப்படத்தின் டைட்டிலோடு அதிகார்பூர்வமாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
தலைவர் 169 படத்திற்கு ஜெயிலர் என்ற பெயரில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இந்நிலையில் ஜெய்லர் படம் ஹாலிவுட் படமான எஸ்கேப் பிளான் படத்தின் காப்பி என்று பலர் இணையத்தில் கூறி வருகிறார்கள்.
#Thalaivar169 is #Jailer@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/tEtqJrvE1c
— Sun Pictures (@sunpictures) June 17, 2022
‘தலைவர் 169’ படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும், மேலும் இது இரண்டு நீட்டிக்கப்பட்ட ஷெட்யூல்களாக இருக்கும். படத்தின் பெரும்பகுதி சென்னையில் படமாக்கப்படவுள்ளது, மேலும் படத்தின் முதல் பாதிக்கான ஸ்கிரிப்ட் வேலைகளை இயக்குனர் முடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார், ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரியங்கா மோகனா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் படத்தின் நடிகர்களுடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.