லண்டன் பெண்ணை கடலூரைச் சேர்ந்த வாலிபர் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் உண்ணாமலை செட்டிசாவடியை அடுத்த பத்மாவதி நகரைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மகன் ரஞ்சித். இன்ஜினியரிங் படித்துள்ள இவர், கடந்த சில ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த அன்னலூயிசா என்பவரும் இதே நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இருவரும் ஆரம்பத்தில் கெட்டியான நண்பர்களாக இருந்த பின்னர், அது காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனால் காதலர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்திற்காக காத்திருந்தனர்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு இருவரின் பெற்றோர் திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டினர். இதையடுத்து நேற்று கடலூர் அருகே திருவனந்தபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ரஞ்சித்தும், அன்னலூயிசாவும் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
முன்னதாக அன்னலூயிசா பட்டுப் புடவை அணிந்து திருமண மேடைக்கு வந்து அமர்ந்தார். அதேபோல் திருமண மேடையில் ரஞ்சித் பட்டு சட்டை அணிந்து அமர்ந்திருந்தார். இதையடுத்து அன்னாலுயிசாவுக்கு மணமகன் ரஞ்சித் தாலி கட்டினார். கடல் தாண்டி காதலித்த தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.