கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மறைந்த பாடகர் எஸ்பிபியின் மறைவுக்கு இன்று வரை ரசிகர்கள் மத்தியில் சோகத்தையே ஏற்படுத்தியிருந்தது.
மேலும், ஈடு செய்ய முடியாத எஸ்பிபி. யின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், எஸ்பிபி அவர்களை கௌரவிக்கும் விதமாக வேலூரில் உள்ள அரசு இசை மற்றும் நடன பள்ளி, டாக்டர் எஸ்பி பாலசுப்ரமணியம் இசை மற்றும் நடன பள்ளி என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, தனது தந்தைக்கு இத்தகைய மரியாதையை கொடுத்ததற்கு நன்றி கூறி எஸ்பிபி மகன் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆந்திர அரசுக்கும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
Great full to the #APgov and @ysjagan garu for this honor. https://t.co/qUvHsOP4ZM
— S. P. Charan (@charanproducer) November 27, 2020