தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வு எழுதித்திருந்தனர். இதற்கான முடிவுகள் இன்று (மே 8) ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது தாமதமாக சற்றுமுன் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகளை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
மேலும், இந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவிகள் 96.38% பேரும், மாணவர்களில் 91.45% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில், விருதுநகர் மாவட்டம் 97.85% பேர் தேர்ச்சி பெற்று முதலிடத்திலும், இரண்டாமிடமாக திருப்பூர் 97.79% சதவீதமும், மூன்றாமிடம் 97.59% பெரம்பலூர் மாவட்டமும், நான்காமிடம் 97.57% பேர் பெற்று கோவை மாவட்டமும், ஐந்தாமிடத்தை 97.36% பேர் பெற்ற தூத்துக்குடி மாவட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.