தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதியில் சட்டப்பேரவையில் தமிழக அரசு திருமண மண்டபங்கள் விளையாட்டு மைதானங்களிலும் மதுபானம் பரிமாறலாம் என சட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு பல கட்சிகள் மற்றும் தமிழக அரசின் கூட்டணி காட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனையடுத்து இனி திருமண மண்டபங்களின் மதுபான பரிமாற கூடாது என சட்டத்தை திரும்ப பெற்று கொண்டது தமிழக அரசு.
ஆனால் தமிழகத்தில் உள்ள வணிக வளாகங்கள், மாநாடு நடைபெறும் இடங்கள், அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைக்கவும், விற்கவும் இருந்து வந்த நிலையில், தற்போது இங்கும் மதுபான விற்க தடை விதிக்க வேண்டும் என சமூக நீதி பேரவை தலைவர் கே.பாலு அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து இன்று விசாரித்த நீதிபதி அவர்கள் இனி சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என கூறி ஜூன் 14-ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்துள்ளனர்.