தமிழக முதல்வர் ஸ்டாலின் தொழில் முறை பயணமாகச் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குக் கடந்த மே 23ஆம் தேதியன்று சென்றிருந்தார். அங்குப் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றியும், சில தொழில் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தமும் போடப்பட்டு, தமிழகத்தில் நடைபெறும் உலக தொழில் முதலீட்டர்கள்கள் மாநாட்டுக்கு அழைப்பும் விடுத்து, இன்று சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜப்பான் பயணம் குறித்து அந்நாட்டு முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான நிக்கி-யில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “ஜப்பான் வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டோக்கியோவில் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் மத்தியில் பேசினார். தமிழ்நாடு அரசுக் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதால், அங்குத் தொழில் தொடங்கும் உங்களுக்குத் திறமையான பணியாளர்களை வழங்க முடியும் என்றார்” எனச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -